வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023



 திருவையாறு கடுவெளி தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி நிலையமும் நமது சகோதரிகளும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது 



இதில் சிறப்பு விருந்தினராக அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கோமளவல்லி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் 




அணைத்து சகோதரிகள் மற்றும் மாணவிகள் தங்களது கையெழுத்தினை பதிவிட்டனர் 
                                       

நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் சகோதரிகளை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்பயிற்சி பற்றியும் நமது தொழிற்பயிச்சி நிலையத்தை பற்றியும் இங்கு இருக்கும் அணைத்து வாய்ப்புகளை பற்றியும் சிறப்பு உரையாற்றினார் 
சிறப்பு விருந்தினர் திருமதி கோமளவல்லி அவர்களை கௌரவிக்கும் விதமாக நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தார் 

நமது சகோதரிகள் நிகழ்ச்சியில் நிலையத்தின் பயிற்றுனர் திரு P மோகன் ATO அவர்கள் வாழ்த்துரையாற்றி விருந்தினர் மற்றும் சகோதரிகள் மற்றும் சக பயிற்றுநர்கள் அனைவரையும் வரவேற்றார்  


நிலையத்தின் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் தொழிற்பயிற்சியின் விழிப்புணர்வு மற்றும்  வேலைவாய்ப்பை பற்றி அணைத்து சகோதரிகளுக்கும் எடுத்துரைத்தார் 

நிகழ்ச்சியின் முடிவில் நிலையத்தில் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் நன்றியுரை கூறி இந்நிகழ்ச்சியை சிறப்பாக முடித்து வைத்தார்

 கலந்துகொண்ட அணைத்து சகோதரிகளும் கையெழுத்திட்ட பேனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு